"சட்டத்தரணி என்னை அடையாளம் கண்டுவிடுவார் என்பதால் சுட்டோம்" - அக்குரேகொட கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்!

27 Feb, 2026 | 09:31 AM
image

அக்குரேகொட சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரிக்கு மொனராகலையில் தங்குமிட வசதி செய்துகொடுத்த மற்றுமொரு சந்தேகநபரும்  நேற்று விாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை,படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி பொலிஸ் விசாரணைகளின் போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். 

மேற்கு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் 72 மணிநேர தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரதான துப்பாக்கிதாரி, தான் முன்னதாக இரு வழக்குகளுக்காக உயிரிழந்த சட்டத்தரணி புத்திகவிடம் முன்னிலையாகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற போது, "புத்திக எனது இரு வழக்குகளில் முன்னிலையாகியவர், அவர் என்னை அடையாளம் கண்டுவிடுவார்" எனத் தனது கூட்டாளியிடம் கூறிவிட்டு, காரை ஒருபுறமாக நிறுத்திவிட்டு சட்டத்தரணிக்கு மிக அருகில் சென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிக அவர்களைக் கொலை செய்வதற்கு 'கரந்தெனிய சுத்தா' என்பவரே தனக்கு உத்தரவிட்டதாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். 

இதன்போது 'லலா' என்பவருடன் இணைந்து சென்ற தான், சிறைச்சாலை அதிகாரி மீது இரண்டு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், தென் மாகாணத்தில் இடம்பெற்ற முப்பரிமாணக் கொலை  ஒன்றிலும் தனக்குப் பங்குள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலைகளுக்குப் பின்னர் துப்பாக்கிதாரிக்கு மொனராகலை - மெதகம, நன்னபுராவ பகுதியில் உள்ள தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் இன்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், மேலதிக விசாரணைக்காக மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

கொலைக்கு முன்னர் பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள தங்குமிடமொன்றிற்கு, ஏற்கனவே கைதான 'ஜானக' என்பவரால் இந்தத் துப்பாக்கிதாரி அழைத்து வரப்படும் சிசிடிவி காட்சிகள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இது விசாரணையில் மிக முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான 3...

2026-04-13 10:51:45
news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10