(நெவில் அன்தனி)
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஸிம்பாப்வே அணிக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 1 போட்டியில் 72 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய நடப்பு சம்பியன் இந்தியா, அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து குழு 1இல் இலிருந்து தென் ஆபிரிக்கா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
குழு 2இல் இருந்து இங்கிலாந்து ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.
இந்தப் போட்டி முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகளும் இந்தியாவும் தலா ஒரு வெற்றியுடன் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு அடுத்ததாக முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருக்கின்றன.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்று சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தனது அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பதிவுசெய்தது.
ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 2007இல் கென்யாவுக்கு எதிராக இலங்கை குவித்த சாதனைமிகு 260 ஓட்டங்ளுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மொத்த எண்ணிக்கை இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
இன்றைய போட்டியில் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்று மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாயில் திறக்கப்படும் என்பதை அறிந்திருந்த இந்தியா, ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த வண்ணம் இருந்தது.
இந்திய வீரர்கள் அனைவருமே 160.00 க்கு குறையாத ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவுசெய்திருந்தனர்.
ஆரம்ப விக்கெட்டில் சஞ்சு செம்சனுடன் 22 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த அபிஷேக் ஷர்மா, இரண்டாவது விக்கெட்டில் இஷான் கிஷானுடன் 42 பந்துகளில் மேலும் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

சஞ்சு செம்சன் 15 பந்துகளில் 25 ஓட்டங்களையம் இஷான் கிஷான் 24 பந்துகளில் 38 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 30 பந்துகளில் 55 ஓட்டங்களையும் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 13 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றனர். (172 - 4 விக்.)
இதனைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் திலக் வர்மா 16 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றதுடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மிகவும் பலமான நிலையில் இட்டனர்.
மிகவும் கடினமான 257 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ப்றயன் பெனெட், தடிவனாஷே மாருமணி ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

மாருமணி 20 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து களம் நுழைந்த டியொன் மயர்ஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். (72 - 2 விக்.)
ப்றயன் பெனெட், அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சிக்கந்தர் ராஸா 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
ரெயான் பேர்ல் (0), டஷிங்கா முனியொங்கா (11), முசேக்கிவா (7) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
ப்றயன் பெனெட் 20 ஓவர்களும் தாக்குப் பிடித்து 97 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அர்ஷ்திப் சிங் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM