இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தாமதிக்கப்படுவதாக இந்தியா விசனம் வெளியிட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்திருக்கின்றது.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடிய நிலையிலேயே இவ்வாறு இந்திய உதவியுடனான திட்டங்கள் தாமதிக்கப்படுவது தொடர்பில் உரையாடியதாக தெரியவருகிறது.
இலங்கை அரசாங்கம் உள்ளக அரசியல் சவால்களை சமாளித்து வரும் விதம் தொடர்பில் டில்லி பாராட்டுவதாக தெரிவித்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்திய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் விரைந்து தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தாமதம் அடைவது தொடர்பாக டில்லி அண்மைக்காலமாக கவலையடைந்துள்ள நிலையிலேயே தற்போது இந்திய வெளியுறவு அமைச்சர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM