அமெரிக்காவைத் தளமாக கொண்டு இயங்கும் 'நவ்வாவ்' அமைப்பின் அனுசரணையுடன், பதுளை மாவட்டம் ஹப்புத்தளை பிரதேசத்தில் உள்ள இரண்டு தமிழ்ப் பாடசாலைகளில் இந்தாண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று கடந்த 23ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பதுளை, இதல்கஸ்ஹின்ன தமிழ் வித்தியாலயம் மற்றும் போவே தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 30 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நன்மைப்பெறவுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலை நேர வகுப்புக்கு மேலதிகமாக மாலை நேர விசேட வகுப்புகளும், வார இறுதி விசேட கருத்தரங்களும் நவ்வாவ் அமைப்பின் அனுசரணையுடன் நடத்தப்படவுள்ளதுடன், அந்த வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கான காகிதாதிகள், மாதிரி வினாத்தாள்கள், அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்டவை நவ்வாவ் அமைப்பினால் இலவசமாக வழங்கப்படவுள்ளன. அத்துடன் கருத்தரங்களுக்கான முழுமையான செலவினங்களும் நவ்வாவ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் மேலதிக வகுப்பு நேரத்தில் மாணவர்களுக்கான சத்துணவு திட்டம் ஒன்றும் இலவசமாக நடைமுறைப்படுப்படுகிறது.
இந்த வேலைத்திட்டம் கடந்த 23ம் திகதி அந்தநந்த பாடசாலைகளில் நவ்வாவ் அமைப்பின் சார்பில் சுயாதீன ஊடகவியலாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரனினால், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசியர்களின் பங்குபற்றலுடனும், பெற்றோரின் பிரசன்னத்துடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாணவர்களின் வளர்ச்சி கருதி, தூரநோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம், தங்களுடைய பிள்ளைகளுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM