இந்தியாவில் நடைபெற்ற ஊடக முகாமைத்துவம் தொடர்பான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சிகளை, இலங்கையைச் சேர்ந்த 60 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிபுணர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
இந்த பயிற்சி நிகழ்ச்சிகள், இந்தியாவின் Dr. MCR Human Resource Development Institute of Telangana (MCRHRD), ஹைதராபாத் நகரில் நடத்தப்பட்டன. ஒரு வார காலம் நீடித்த இந்நிகழ்ச்சிகளில், முதல் குழுவாக 30 பேர் 2026 ஜனவரி 26 முதல் 31 ஆம் திகதி வரை கலந்து கொண்டனர். இரண்டாவது குழுவாக 30 பேர் 2026 பெப்ரவரி 16 முதல் 21 ஆம் திகதி வரை பயிற்சியில் பங்கேற்றனர்.
இந்திய அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட இப்பயிற்சி நிகழ்ச்சிகள், வேகமாக மாறிவரும் உலகளாவிய ஊடக சூழலில் அச்சு, மின்னணு, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக துறைகளில் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
செய்தியறை மாற்றம், தொடர்பாடல், நெறிமுறை பத்திரிகைத்துறை, ஊடக தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் ஆகியவற்றில் பங்கேற்பாளர்களுக்கு விரிவான அறிவூட்டல் வழங்கப்பட்டது. இலங்கையின் முக்கிய அச்சு, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் இதில் பங்கேற்றனர்.
MCRHRD நிறுவனம், தலைமைத்துவ மேம்பாடு மற்றும் ஆட்சிப் பயிற்சி வழங்கும் முன்னணி நிறுவனமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இரு குழுக்களும் நிபுணர்களின் சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள், குழு செயல்பாடுகள், விளக்கவுரைகள் மற்றும் களப்பயணங்கள் மூலம் ஆழ்ந்த கற்றல் அனுபவத்தைப் பெற்றனர்.
இந்த பயிற்சிகளின் போது நடத்தைத் திறன்கள் மூலம் மனிதவள திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு (AI) உட்பட உருவாகும் புதிய ஊடக தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் தரவு சார்ந்த செய்தியளிப்பு, தவறான தகவல் மற்றும் பிரச்சாரங்களை எதிர்கொள்வது, நல்லாட்சியில் சமூக ஊடகத்தின் பங்கு, ஊடகவியலாளர்களுக்கான ஒளிப்பதிவு நுட்பங்கள், நெருக்கடி முகாமைத்துவ தொடர்பாடல், தொழில்முறை நடைமுறைகள் மற்றும் நேர்காணல் தயாரிப்பு போன்ற தலைப்புகளின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அனுபவ அடிப்படையிலான கற்றலின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பண்பாட்டு களப்பயணங்களை மேற்கொண்டனர்.
அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க Charminar நினைவுச்சின்னத்தையும் பார்வையிட்டனர். மேலும், இந்தியாவின் முன்னணி புதுமை மையமான T-Hub-ஐப் பார்வையிட்டு, நாட்டின் சுறுசுறுப்பான ஸ்டார்ட்அப் சூழலை அறிந்துகொண்டனர்.
இந்த களப்பயணங்கள், இந்தியாவின் பாரம்பரியம், புதுமை வளர்ச்சி, ஜனநாயக மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பௌத்த பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சிகள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2025 ஏப்ரலில் இலங்கைக்கு மேற்கொண்ட அரசுப் பயணத்தின் போது அறிவித்த விரிவுபடுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு கட்டமைப்பின் கீழ் நடத்தப்பட்டன.
இந்த முயற்சியின் கீழ், முன்னிருந்த Indian Technical and Economic Cooperation (ITEC) திட்டங்களுக்கு மேலாக, ஆண்டுதோறும் 700 கூடுதல் தனிப்பயன் பயிற்சி இடங்கள் இலங்கை நிபுணர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், National Centre for Good Governance மற்றும் Sri Lanka Institute of Development Administration ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுதோறும் சுமார் 300 இலங்கை சிவில் சேவை அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர்.
இதன் மூலம், இந்தியாவின் விரிவடைந்த திறன் மேம்பாட்டு கூட்டாண்மை ஆண்டுதோறும் சுமார் 1,000 இலங்கையர்களுக்கு பயனளித்து வருகிறது.
இப்பயிற்சிகள் காலப்பொருத்தமானவை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை எனப் பரவலாக மதிப்பிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு மற்றும் நெருக்கடி தொடர்பாடல் போன்ற துறைகளில், வேகமாக மாறிவரும் தகவல் சூழலுக்கு திறம்பட பதிலளிக்க ஊடக நிபுணர்களை இவை வலுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM