பேரனர்த்தத்தின் போது பாலின உணர்திறன் மிக்க செய்தி அறிக்கையிடல் தொடர்பான விசேட செயலமர்வு

24 Feb, 2026 | 11:18 AM
image

நாட்டில் அனர்த்தங்களின் போது பாலின அடிப்படையிலான பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு செய்திகளை வெளியிடுவது தொடர்பான விசேட செயலமர்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பேரனர்த்தத்தின் போது பாலின உணர்திறன் மிக்க செய்தி அறிக்கையிடல்’ எனும் தலைப்பிலான இந்த செயலமர்வு கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெற்றது. 

இந்த செயலமர்வில் பத்திரிகை, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைச் சேர்ந்த 25 தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த பயிற்சி பட்டறைக்கு ‘துர்யோக் நிவாரண்’ அமைப்புத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. 

அண்மையில் இலங்கையைப் பாதித்த 'தித்வா ' சூறாவளிக்குப் பின்னரான சூழலில், அனர்த்த அறிக்கையிடலில் பாலின சமத்துவத்தைப் பேணுதல், தார்மீக விழுமியங்களைப் பின்பற்றுதல் மற்றும் உள்ளடக்கிய சமூகப் பொறுப்புள்ள ஊடகவியலை ஊக்குவிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

இந்த பயிற்சிப்பட்டறையில் அனர்த்த இடர் குறைப்பு மற்றும் பாலின உணர்திறன் மிக்க ஊடகவியல் குறித்துப் பல நிபுணர்கள் உரையாற்றினர்.

இந்த செயலமர்வில் அனர்த்த இடர் முகாமைத்துவத்தில்  ஊடகங்களின் வகிபாகம் தொடர்பில் துர்யோக் நிவாரண அமைப்பின் மாதவி ஆரியபந்து விளக்கினார்.

அனர்த்தங்களின் போது பெண்களின் நேரடி அனுபவங்கள் மற்றும் சவால்கள் தொடர்பில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் குமுதினி சாமுவேல் உரையாற்றினார்.

ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் குரல்களை ஊடகங்களில் எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்து சிரேஷ்ட புலனாய்வு ஊடகவியலாளர் தில்ருக்ஷி ஹந்துனெத்தி விளக்கினார்.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின் போது பெண்களின் தேவைகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதை விளக்கும் ‘அனர்த்தங்களை எதிர்கொள்ளல், தீர்மானங்களை எடுத்தல்: பாலின பரிமாணங்கள்’ எனும் ஆவணப்படம் இதன்போது திரையிடப்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னரும் இன்றும் அனர்த்த முகாமைத்துவத்தில் அதே போன்ற இடைவெளிகள் காணப்படுவதாகப் பங்கேற்பாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

பெண்கள், சிறுமிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயோதிபர்கள் அனர்த்தங்களின் போது எதிர்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான பாதிப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை அறிக்கையிடுவதற்கான நடைமுறைப் பயிற்சிகளும் இதன்போது வழங்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09
news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின்...

2026-03-07 15:41:39