எஸ்.ரிலீவரன்
இலங்கை அச்சகத்தார் சங்கம் (SLAP) ஏற்பாடு செய்துள்ள 'ஸ்ரீலங்கா பிரிண்ட் 2026' (Sri Lanka Print 2026) கண்காட்சி மற்றும் வர்த்தக விழாவின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு, கடந்த 20 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் உள்ள விக்டோரியா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் தலைவர்கள், கண்காட்சியாளர்கள், ஊடக அனுசரணையாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அச்சு மற்றும் பொதியிடல் (Printing & Packaging) துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்திய இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் ஜனக ரத்னகுமார, இம்முறை கண்காட்சியானது முன்னெப்போதையும் விட மிகவும் விரிவானதாகவும், சர்வதேச ஒத்துழைப்புடன் கூடியதாகவும் அமையும் என வலியுறுத்தினார். பல நாடுகளிலிருந்து சர்வதேச பங்காளர்களை ஈர்ப்பதன் மூலம், புத்தாக்கம் மற்றும் வணிக மேம்பாட்டிற்கான ஒரு உலகளாவிய தளத்தை இது உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"நாளைய விடியலுக்கான நிலைபேறு மற்றும் புத்தாக்கம்" (Sustainability and Innovation for Tomorrow) எனும் இவ்வாண்டுக்கான கருப்பொருள் குறித்து பேசிய அவர், நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி நகரும் அதேவேளை, சூழல் ரீதியான பொறுப்புணர்வுடன் செயல்பட இலங்கை அச்சகத்தார் சங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பிரிண்ட் 2026 நிகழ்ச்சித் திட்டத் தலைவர் நிஷாந்த பெரேரா, இக்கண்காட்சி 2026 ஏப்ரல் 24 முதல் 26 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் என அறிவித்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி, உற்பத்தியாளர்கள் தமது புதிய தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தவும், கொள்வனவாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தவும் சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.
மேலும், இவ்விழாவின் முக்கிய அங்கமான விருது வழங்கும் நிகழ்வு ஏப்ரல் 25 ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு 'சினமன் லைஃப்' (Cinnamon Life) ஹோட்டலில் நடைபெறும் என்றும், அதற்கான விண்ணப்பங்களை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் ஜனக்க ரத்னகுமார, முன்னாள் தலைவர் அனில் காரியவசம், முதலாவது உப தலைவர் நிஸாந்த பெரேரா, இரண்டாம் உப தலைவர் செந்தில்நாதன், பொதுச் செயலாளர் சமில விதானகே, பொருளாளர் ஹர்ஷ கயான், அச்சகத்தார் சங்கத்தின் அங்கத்தினர்கள், பங்குதாரர்கள், ஏற்பாட்டு குழுவினர் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை அச்சகத்தார் சங்கம் (SLAP) என்பது நாட்டின் அச்சுத் தொழில்துறையினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகபூர்வ அமைப்பாகும். 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தச் சங்கம், இலங்கையின் அச்சுத் தொழிலைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் மற்றும் படிப்படியாக மேம்படுத்தவும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டது.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்த சங்கம், அச்சுத் துறையில் புத்தாக்கம், தொழில்முறைத் தரம் மற்றும் சிறந்து விளங்குதல் போன்றவற்றைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM