திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை மேபீல்ட் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று விடியற்காலை 3 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால் தொழிற்சாலையில் ஒரு சில பகுதி சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
குறித்த தொழிற்சாலையில் பொருத்தப்பட்டுள்ள விறகு அடுப்பின் புகை வெளியேறும் பகுதியில் ஏற்பட்ட தீக் கசிவினால் தொழிற்சாலையின் இரண்டாவது மாடியில் ஒரு பகுதியளவும் ஏனைய சில பகுதிகளிலும் தீ பரவியுள்ளது.
அத்தோடு தீ ஏற்பட்டதன் காரணமாக தேயிலை தூளும், தேயிலைக் கொழுந்துகளும் தீக்கிரையாகியுள்ளன.
இதனையடுத்து குறித்த தோட்ட பொதுமக்களினதும், அட்டன் , டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவினரும், திம்புள்ள, பத்தனை பொலிஸாரினதும் முயற்சியினால் தீ கட்டுப்பாபாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் பாதிப்புக்குள்ளாக கூடிய தொழிற்சாலையின் பெருமளவிலான சொத்துக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக மேபீல்ட் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM