மன்னார் வடக்கு மற்றும் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடல் பகுதியில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை கடற்படை, கடலோர காவற்படைத் திணைக்களத்துடன் இணைந்து, நேற்று புதன்கிழமை (18) இரவு முன்னெடுத்த சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த நான்கு இந்திய மீன்பிடி படகுடன், 22 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு மீன்பிடி படகுகள் நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி ஈடுபடுவதால் ஏற்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளின் பாதகமான தாக்கத்தையும், உள்ளூர் மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தையும் கண்டறிந்து, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் மூலம், இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி சமூகத்தின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான கூட்டு மற்றும் வலுவான அணுகுமுறை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.
இந்த நடவடிக்கைகளின் மூலம், மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் அதில் இருந்த 10 இந்திய மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடமும் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் அதில் இருந்த 12 இந்திய மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலடி மீன்வள ஆய்வாளரிடமும் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்கடை தெரிவித்துள்ளது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM