4 படகுகளுடன் 22 இந்திய மீனவர்கள் கைது!

Published By: Digital Desk 1

19 Feb, 2026 | 03:28 PM
image

மன்னார் வடக்கு மற்றும் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடல் பகுதியில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை கடற்படை, கடலோர காவற்படைத் திணைக்களத்துடன் இணைந்து, நேற்று புதன்கிழமை (18) இரவு முன்னெடுத்த சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த நான்கு இந்திய மீன்பிடி படகுடன், 22 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு மீன்பிடி படகுகள் நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி ஈடுபடுவதால் ஏற்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளின் பாதகமான தாக்கத்தையும், உள்ளூர் மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தையும் கண்டறிந்து, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் மூலம், இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி சமூகத்தின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான கூட்டு மற்றும் வலுவான அணுகுமுறை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.

இந்த நடவடிக்கைகளின் மூலம், மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் அதில் இருந்த 10 இந்திய மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடமும் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் அதில் இருந்த 12 இந்திய மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலடி மீன்வள ஆய்வாளரிடமும் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்கடை தெரிவித்துள்ளது.   

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள...

2026-04-19 07:56:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு...

2026-04-19 07:56:07
news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40
news-image

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி...

2026-04-18 15:46:41