நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஃபோர்த் ஃப்ளோர்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநரும், நடிகருமான சேரன் இசையை வெளியிட்டார்.
இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகி உள்ள ' ஃபோர்த் ஃப்ளோர் ' எனும் திரைப்படத்தில் ஆரி, தீப்ஷிகா, பவித்ரா , சுப்ரமணிய சிவா, 'தலைவாசல்' விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜெ. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மனோ கிரியேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் சேரன்- சுசீந்திரன்- விஜய் மில்டன், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், நடிகர்கள் பரத் - பிரஜின் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''இந்தத் திரைப்படம் ஹாரர் -திரில்லர்- கொமர்சல்- பல வகையினதான ஜேனர்களில் உருவாகி இருக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான பரபரப்பான திரை அனுபவத்தை வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்' என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM