நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு 

Published By: Digital Desk 3

18 Feb, 2026 | 01:05 PM
image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, செவ்வாய்க்கிழமை (17) அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார்.

இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், அண்மைக்கால பொருளாதார மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பாராட்டியதுடன், 'தித்வா' சூறாவளியானது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், அதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும் மீளெழும் திறனைக் கட்டியெழுப்புவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'தித்வா' சூறாவளிப் பாதிப்பிற்குப் பின்னர் இலங்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்புகளைப் பிரதமர் பாராட்டினார். பொருளாதார வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி ஊடாக, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு நேரடியாகப் பயன்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். 

மேலும், அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை உறுதி செய்தல், சுற்றுலாத்துறையின் தரத்தை மேம்படுத்துதல், நிலையான முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதன் அவசியம் ஆகியன குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.

கல்வியை வெறும் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, திறன்கள் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மையமாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரின் பணிக்குழாம் (பிரதானி அண்ட்ரியாஸ் பாயர், ஆசிய பசிபிக் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா,  மூலோபாய தொடர்பாடல் பிரிவுத் தலைவர் கலாநிதி பியர் மெஜ்லக், இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி மார்த்தா வோல்டெமைக்கேல்), இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பிரதி ஆளுநர் கலாநிதி சி. அமரசேகர, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52
news-image

எரிபொருள் கியூ.ஆர் குறியீடு முறை முழுமையாக...

2026-03-15 16:04:28