முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அண்டை நாடான இந்தியாவுடனான உறவுகள் குறித்து அமெரிக்கா அதிகளவு கரிசனை கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ்க்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப்பின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது.
இச்சந்திப்பின் ஒரு கட்டத்தில் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ்,
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். ஆகவே அது உங்களுக்கு தாக்கம் செலுத்துவதாக உள்ளதா?" என்ற தொனிப்பட வினாவொன்றை எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனிடத்தில் தொடுத்துள்ளார்.
அச்சமயத்தில் பதிலளித்த சம்பந்தன்,
"புதிய அரசியலமைப்பு உட்பட ஏனைய விடயங்களில் மஹிந்த கொண்டிருக்கும் புரிதல் தொடர்பாக சில மாறுபட்ட நிலைமைகள் காணப்படுகின்றன, இருப்பினும் யதார்த்த நிலைமைகளை வெளிப்படுத்துவதற்காகவும் அது தொடர்பில் அவருக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் நான் நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். அண்மையில் கூட நான் அவரை நேரடியாக சந்தித்துள்ளேன். அவ்வாறான சந்திப்புக்களை மேலும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றேன்" என்று குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தியாவுடன் கூட்டமைப்பு கொண்டிருக்கும் தொடர்புகள், தமிழ்நாட்டுடன் கொண்டிருக்கும் உறவுகள் தொடர்பாகவும் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது பதிலுரைத்த சம்பந்தன்,
" இந்திய மத்திய அரசாங்கத்துடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் தமிழ் மக்களின் விடயத்தில் கூடியளவான கரிசனையைக் கொண்டிருக்கின்றார்கள். தமிழகத்தினைப் பொறுத்தவரையில் அவர்கள் உணர்வு ரீதியான பேராதரவினைக் கொண்டிருக்கின்றார்கள்" என குறிப்பிட்டார்.
இச்சமயத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் குறுக்கீடு செய்து "தமிழ் நாட்டில் தற்போது அரசியல் சூழலில் மாற்றங்கள் இடம்பெறுகின்றன. விரைவில் அந்த மாற்றங்கள் சாதகமான நிலைமைக்கு நிச்சயமாக மாறும்" என்று குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இக் கலந்துரையாடலின் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் விடயத்திலும் இந்தியாவுடன் கொண்டிருக்கும் உறவு தொடர்பிலும் அமெரிக்காவின் கரிசனை சமகால அரசியல் சூழலில் அதிகரித்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM