கொழும்பில் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை

18 Feb, 2026 | 11:06 AM
image

கொழும்பில் பல பகுதிகளில் புதன்கிழமை (18) நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அம்பத்தலையிலிருந்து தெகிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

அதன்படி, மொரட்டுவை, இரத்மலானை, கட்டபெத்த, சொய்சாபுரம்,  கல்கிஸ்ஸ, தெகிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவை, பத்தரமுல்லை ஆகிய பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர் விநியோகத்தை வியாழக்கிழமை (19)  அதிகாலை 6.00 மணிக்குள் மீண்டும் வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பொது மக்களுக்கு  ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை  வருந்துவதுடன், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு: 1939 என்ற அவசர இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00
news-image

உள்நாட்டு நிர்வாகத் தவறுகளை மத்திய கிழக்கு...

2026-03-11 05:43:34
news-image

மத்திய கிழக்கு போர் சூழல்; பாதிப்புக்கள்...

2026-03-11 05:40:18