39 ஆவது ஆபிரிக்க ஒன்றிய (African Union) உச்சிமாநாட்டின் ஓரங்கமாக, காலநிலை நடவடிக்கைகள் மற்றும் நிலையான வளர்ச்சி நோக்கங்களைக் கொண்ட உயர் மட்ட இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, கென்யா ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவுடன் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் மற்றும் முன்னாள் தூதர் காணநாதன் ஆகியோர் கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலின் போது, காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு ஆதரவாக புதிய மற்றும் புதுமையான காலநிலை நிதி அமைப்புகளை உருவாக்குதல் ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.
உலகளாவிய காலநிலை நெருக்கடியை சமாளிக்க வலுவான மற்றும் திடமான தலைமைத்துவம் அவசியம் என்பதை தலைவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படும் நாடுகளுக்கு ஆதரவளிக்க முறையான சர்வதேச கூட்டாண்மைகள் மிகவும் அவசியமானவை என அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த சந்திப்பு, காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவதாக பார்க்கப்படுகிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM