(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கொல்கொத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்களில் இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்களால் மிக அவசியமான வெற்றியை ஈட்டியது.
இக் குழுவில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி அடைந்ததால் நெருக்கடியை எதிர்கொண்ட இங்கிலாந்துக்கு இன்றைய வெற்றி ஆறுதல் அளித்துள்ளதுடன் சுப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான அதன் வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
ஆதில் ராஷித், ஜொவ்ரா ஆச்சர் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் டொம் பென்டனின் ஆட்டம் இழக்காத அரைச் சதமும் இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (49), மைக்கல் ஜோன்ஸ் (33), டொம் ப்றூஸ் (24), ஒலிவர் டேவிட்சன் (20) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆதில் ராஷித் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லியாம் டோசன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
153 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 18.2 ஒவர்களில் 5 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று வெற்றயீட்டியது.
ஆரம்ப வீரர்கள் பில் சோல்ட், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்ததும் இங்கிலாந்து சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (13 - 2 விக்.)
எனினும் ஜேக்கப் பெத்தெல், டொம் பென்டன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ஜேக்கப் பெத்தெல் 32 ஓட்டங்களுடன் வெளியேறியதுடன் ஹெரி ப்றூக் 4 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். இதனால் இங்கிலாந்து மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
இந் நிலையில் டொம் பென்டன், சாம் கரன் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை அண்மிக்க உதவினர்.
சாம் கரன் 28 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து டொம் பென்டன், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர்.
டொம் லென்டன் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 63 ஓட்டங்களுடனும் வில் ஜெக்ஸ் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.
ஆட்டநாயகன்: டொம் பென்டன்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM