டித்வா சூறாவளியால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தபோதிலும், அந்த கொடுப்பனவும் மூதூர் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் 2 மணியளவில் மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே ரூ. 25,000 கொடுப்பனவு பெற்ற அனைவருக்கும் ரூ. 50,000 வழங்கப்பட தகுதியானவர்கள் என போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

மேலும், சிலருக்கு மட்டுமே ரூ. 50,000 வழங்கப்பட்டுள்ளதாகவும், பல தகுதியானவர்கள் இதுவரை அந்த நிவாரணத் தொகையை பெறவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அண்மையில் நாட்டை தாக்கிய டித்வா சூறாவளி காரணமாக மூதூர் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார இழப்புகளை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளில் சிலருக்கு, மூதூர் பிரதேச செயலக அலுவலகத்தில் பிரதேச செயலாளரை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மூதூர் பிரதேச செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக மீள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தகுதி உடையவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணத் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM