இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2.5 சதவீத வரி அறவிடப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இது, 2026 பட்ஜெட்டில் அங்கீகரிக்கப்பட்ட வரி எனவும், தற்போது அனுமதி பெறும் வாகனங்களுக்கு பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தினால், அதனுடன் தொடர்புடைய வரி வசூலிக்கப்படும்.
இன்று வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
வாகனத்தின் பெறுமதி அதிகமாக இருப்பதால் 2.5 சதவீதம் என்பது ஓரளவு கவனிக்கத்தக்க வரியாகும். எளிமையாகச் சொன்னால், 1 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள வாகனத்தின் விலை சுமார் 2.5 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கிறது.
எனவே, வரி வசூலிக்கப்பட்டுள்ளதால், வாகன விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 'டித்வா' அனர்த்தத்திற்கு பின்னர், தற்போது வாகனங்கள் ஆர்வத்துடன் வாங்கப்படுவதாகவும்; வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அரோஷ ரொட்ரிகோ சுட்டிக்காட்டியுள்ளார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM