களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலாவ பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
களனி பிரதேச குற்றப்புலனாய்வு பணியகத்தினரால், மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 700 கிராம் ஐஸ் போதைப்பொருள், 2 கையடக்க தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனையினூடாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 26 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேநேரம், 10 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரும், 10 கிராம் 150 மில்லிகிராம் போதைப்பொருளுடன் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொஸ்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கொஸ்கம, புவக்பிட்டிய மற்றும் ஹங்வெல்ல பகுதிகளை சேர்ந்த 23, 30 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM