(நெவில் அன்தனி)
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண வராற்றில் தலா இரண்டு தடவைகள் சம்பியனான இரண்டு அணிகளுக்கு இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (11) நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் இங்கிலாந்தை 30 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது.
ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் குவித்த அபார அரைச் சதம், குடாகேஷ் மோட்டி, ரொஸ்டன் சேஸ் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சுகள் என்பன மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை சுலபமாக்கின.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர்களான ப்றண்டன் கிங் (1), அணித் தலைவர் ஷாய் ஹோப் (0) ஆகிய இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் ஆட்டம் இழந்ததால் மேற்கிந்தியத் தீவுகள் மோசமான நிலையில் இருந்தது. (8 - 2 விக்.)
இந் நிலையில் ஷிம்ரன் ஹெட்மயர் (23), ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 28 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ரொஸ்டன் சேஸ் 34 ஓட்டங்களைப் பெற்று நான்காவதாக ஆட்டம் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ஷேர்ஃபேன் ரதஃபர்ட், 5ஆவது விக்கெட்டில் ரோவ்மன் பவலுடன் 51 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் ஜேசன் ஹோல்டருடன் 61 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை பலப்படுத்தினர்.
ரோவ்மன் பவல் 14 ஓட்டங்களையும் ஜேசன் ஹோல்டர் 17 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்களுடன் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் 42 பந்துகளில் 2 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஆதில் ராஷித் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து தனது இன்னிங்ஸை வேகமாக ஆரம்பித்தபோதிலும் சிரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் சற்று தடுமாற்றம் அடைந்தது.
பில் சோல்ட், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 20 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதில் பில் சோல்ட் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து ஜொஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர 7ஆவது ஓவரில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஜொஸ் பட்லர் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்துடன் மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.
டோம் பென்டன் (2), ஜேக்கப் பெத்தேல் (33) ஆகிய இருவரே சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
இந் நிலையில் அணித் தலைவர் ஹெரி ப்றூக் (17), சாம் கரன் ஆகிய இருவரும் ஐந்தாவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர்.
ஆனால், இங்கிலாந்தின் கடைசி 6 விக்கெட்கள் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.
மத்திய வரிசை வீரர் சாம் கரன் தனித்து போராடியபோதிலும் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை அவரால் தடுக்க முடியாமல் போனது. அவர் 30 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரொஸ்டன் சேஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்:ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட்













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM