(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் தென் ஆபிரிக்கா இரட்டை சுப்பர் ஓவரில் வெற்றியீட்டியது.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் சுப்பர் ஓவரில் முடிவடைந்த முதலாவது போட்டி இதுவாகும்.
இப் போட்டி முடிவுடன் ஆப்கானிஸ்தான் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் அதன் சுப்பர் 8 வாய்ப்பு ஊசலாடத் தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே மொத்த (187 ஓட்டங்கள்) எண்ணிக்கையைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிப்பதற்காக மத்தியஸ்தர்களால் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.
சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களைப் பெற்றது.
தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றது.
இதனால் இரண்டாவது தடவையாக ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் பிரகாரம் சம்நிலையில் முடிவடையும் போட்டி, சுப்பர் ஓவரிலும் சமநிலையில் முடிவடைந்தால் வெற்றி அணி தீர்மானிக்கப்படும்வரை சுப்பர் ஓவர் தொடரவேண்டும்.
இதற்கு அமைய அமுல்படுத்தப்பட்ட இரண்டாவது சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்களையும் இழந்து 19 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
சமநிலையில் போட்டி முடிவு
தென் ஆபிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (5) ஆட்டம் இழந்த பின்னர் குவின்டன் டி கொக், ரெயான் ரிக்ல்டன் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.
ரெயான் ரிக்ல்டன் 28 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களையும் குவின்டன் டி கொக் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களையும் குவித்தனர்.


அவர்களை விட டிவோல்ட் ப்ரவிஸ் 23 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் மார்க்கோ ஜென்சன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஷித் கான் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
188 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் ஆட்டம் சம நிலையில் முடிவடைந்தது.
கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கெகிசோ ரபடாவின் முதலாவது முதலாவது பந்து நோபோலானது. அடுத்த பந்து வைட் ஆக ப்றீ ஹிட் தொடர்ந்து. ஆனால், ப்றீ ஹிட்டை நூர் அஹ்மத் சரியாக பயன்படுத்தாததுடன் அந்தப் பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை.
அடுத்த பந்தில் நூர் அஹ்மத் பக்கவாட்டில் நகர்ந்து சிக்ஸாக விளாசினார்.
கடைசி 4 பந்துகளில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
மூன்றவாது பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை.
ரபடா வீசிய 4ஆவது பந்தும் நோபோலானதுடன் அந்தப் பந்தில் 2 ஓட்டங்களும் பெறப்பட்டது.
இப்போது கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அடுத்த பந்தை நூர் அஹ்மத் வைட் லோங் ஓன்னை நோக்கி பந்தை அடித்து 2 ஓட்டங்களைப் பெற முயற்சித்தார்.
ஆனால், களத்தடுப்பில் வேகமாக செயல்பட்ட மார்க்கோ ஜென்சன் பந்தைப் பிடித்து பந்துவீச்சாளர் ரபடாவுக்கு எறிந்தார்.
அதனைப் பிடித்த ரபடா மின்னேல் வேகத்தில் தாவி பந்துடன் இடது கையால் ஸ்டம்ப்களை தட்டி பஸால்ஹக் பாறூக்கியை ரன் அவுட் ஆக்க போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அற்புதமாக துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 4 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைக் குவித்தார். அவரைவிட அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (22), அணித் தலைவர் ராஷித் கான் (20) ஆகிய இருவரே ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர். நூர் அஹ்மத் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் லுங்கி நிகிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அதன் பின்னர் முதலாவது சுப்பர் சம நிலையில் முடிவடைய இரண்டாவது சுப்பர் ஓவரில் தென் ஆபிரிக்கா வெற்றியீட்டியது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM