மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ; தலைநகரில் முதல் உயிரிழப்பு பதிவு ; இதுவரை 28 பேர் பலி ; பாடசாலைகளில் முகக்கவசம் அணியுமாறு அறிவிப்பு 

11 Feb, 2026 | 02:39 PM
image

மெக்சிகோ நாட்டின் பல நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தலைநகரில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, தட்டம்மை காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்ததாக உள்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் அந்நாட்டில் உள்ள பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. 

ஜாலிஸ்கோ மாநிலத்தில் குவாடலஜாராவில் பகுதியில் இதுவரை 1,245 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வாரத்தில் 2.5 இலட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. 

மேலும் மெக்சிகோ நாடு முழுவதும் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த தீவிர சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, பாடசாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோமுஸ் நீரிணை மூடல்: சர்வதேச ரீதியில்...

2026-03-11 09:22:45
news-image

வான்வழி தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர்...

2026-03-10 20:56:01
news-image

ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்...

2026-03-10 18:55:22
news-image

இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு

2026-03-10 17:10:40
news-image

வியட்நாமிலும் எரிபொருள் நெருக்கடி: ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே...

2026-03-10 16:04:55
news-image

ஈரானிய கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம் 

2026-03-10 14:26:09
news-image

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு ;...

2026-03-10 14:11:09
news-image

லெபனானில் வன்முறை தீவிரம் : இடம்பெயர்ந்த...

2026-03-10 13:43:27
news-image

ஈரான் போர், மத்திய கிழக்கில் பதற்றத்தைத்...

2026-03-10 12:39:25
news-image

லெபனானில் உக்கிரமடையும் போர்: 7 இலட்சம்...

2026-03-10 10:27:24
news-image

போர் எப்போது முடியும் என்பதை நாமே...

2026-03-10 09:56:42
news-image

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு சீன...

2026-03-10 06:17:35