விஜய் நடிப்பில் தயாரான 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் தொடுத்திருந்த வழக்கு திரும்ப பெறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
'ஜனநாயகன்' திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழை வழங்க இந்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பாக அப்படத்தினை தயாரித்த கே வி என் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இது தொடர்பான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றமும், அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் விசாரித்தது. பிறகு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதியரசர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனம்- 'ஜனநாயகன்' படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப தீர்மானித்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் தற்போது இந்த திரைப்படத்தை தணிக்கை வாரியத்தின் மறு தணிக்கை குழுவினர் பார்வையிடுவார்கள் என்றும், அவர்கள் பரிந்துரைக்கும் திருத்தங்களை மேற்கொண்ட பிறகு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என்றும், இந்த நடைமுறை விரைவாக நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவை அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் விஜயின் 'ஜனநாயகன்' படம் இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் தொடக்கத்திலோ வெளியாக கூடும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM