உலகின் சிறந்த தொடர்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் சப்யாசாசி சென்குப்தா, Toastmasters International 2025 சர்வதேச மேடைப் பேச்சு சம்பியன், Toastmasters District 82 இன் அழைப்பின் பேரில் எதிர்வரும் சனிக்கிழமை (21) முதல் செவ்வாய்க்கிழமை (24) வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
2025 ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நடைபெற்ற Toastmasters International மாநாட்டில் நடைபெற்ற கடுமையான பல கட்டப் போட்டிகளில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பேச்சாளர்களை வென்று, சப்யாசாசி சென்குப்தா சர்வதேச மேடைப்பேச்சு சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நெதர்லாந்தைச் சேர்ந்த Toastmasters District 59-ஐ பிரதிநிதித்துவப்படுத்திய அவர், “Just Nod” எனும் தலைப்பிலான தனது வெற்றிப் பேச்சின் மூலம், அதன் தனித்துவம், உணர்ச்சி ஆழம் மற்றும் துல்லியத்தால் நடுவர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்தார்.
Toastmasters International நடத்தும் சர்வதேச மேடைப் பேச்சு சம்பியன் போட்டி (World Championship of Public Speaking) உலகின் மிகப் பெரிய போட்டி அடிப்படையிலான மேடைப் பேச்சு நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்பாளர்கள் கழகம், வலய, வட்டார, மாவட்டம், பிராந்தியம் என பல கட்டங்களைத் தாண்டி சர்வதேச அரங்கை அடைகின்றனர். இந்தச் சம்பியன் பட்டம், மேடைப் பேச்சு மற்றும் தலைமைத்துவ தொடர்பாடல் துறையில் கிடைக்கக்கூடிய உயரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், சப்யாசாசி சென்குப்தா உயர் தாக்கம் கொண்ட ஒரு சிறப்பு மாஸ்டர்கிளாஸை நடத்தவுள்ளார். இதில் பங்கேற்பவர்கள் தங்களின் பேச்சுத் திறன், கதை சொல்லும் ஆற்றல் மற்றும் பார்வையாளர்களுடன் இணையும் திறனை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு பெறுவர்.
இந்த பிரத்தியேக நிகழ்வு 2026 பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு HNB Towers-இல் நடைபெறவுள்ளது. Toastmasters உறுப்பினர்களும் பொதுமக்களும் இதில் பங்கேற்கலாம்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பேச்சாளர், பயிற்சியாளர் மற்றும் படைப்பாற்றல் கலைஞராக விளங்கும் சப்யாசாசி சென்குப்தா, நகைச்சுவை, உணர்வுபூர்வ வெளிப்பாடு மற்றும் ஆழமான பார்வைகளை இணைத்து, தொடர்பாடல் குறித்த பாரம்பரிய எண்ணங்களை சவாலாக மாற்றுபவராக அறியப்படுகிறார். அவரது பணி, உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களுக்கு தன்னம்பிக்கை, தெளிவு மற்றும் உண்மைத்தன்மையுடன் பேச ஊக்கமளித்து வருகிறது.
Toastmasters District 82 என்பது இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியப் பிராந்தியம் உள்ளிட்ட 168 Toastmasters கழகங்களில், 4,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
தலைமைத்துவ வளர்ச்சி, உறுப்பினர் விருத்தி மற்றும் கல்வித் தரத்தில் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரித்து, கடந்த ஆண்டு உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட Toastmasters மாவட்டம் என்ற பட்டத்தை District 82 பெற்றது. இது தரம், புதுமை மற்றும் தொடர்பாடல், தலைமைத்துவத்தின் மாற்றுத் திறன் மீதான மாவட்டத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்த வருகை, உலகளாவிய சாம்பியனிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொள்ளும் அபூர்வ வாய்ப்பை இலங்கை மக்களுக்கு வழங்குவதுடன், உலகத் தரமான மேடைப் பேச்சின் சிறப்பை அனுபவிக்கச் செய்கிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM