நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரைநகர் - மாதகல் வீதியில் பொன்னாலே கோவில் அருகே அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் காரைநகர், விக்காவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஆவார்.
இதேவேளை, புத்தளம் - திருகோணமலை வீதியின் 17 ஆம் சந்தி பகுதியில், அனுராதபுரம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, எதிரே வந்த நெல் ஏற்றிய கை உழவு இயந்திரத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் கை உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அளுத்கம - புளியங்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஆவார்.
விபத்து தொடர்பில் 41 வயதுடைய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தம்புள்ளை - ஹபரணை வீதியின் திகம்பதன பகுதியில், ஹபரணை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், வேன் சாரதியும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM