எம்மில் பலருக்கும் காச நோய் உள்ளிட்ட நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வருவர். வேறு சிலர் சுவாசத் திறன் பாதிப்பின் காரணமாகவும், நுரையீரல் தொற்று பாதிப்பின் காரணமாகவும் சிகிச்சைக்காக வைத்தியர்களை சந்திக்கும் போது.. அவர்கள் தோராகோஸ்கோபி எனும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.
இத்தகைய பரிசோதனை உங்களுடைய மார்பு குழிக்குள் உள்ள மருத்துவ நிலைமைகளை ஆய்வு செய்வதற்கும், உங்களுடைய நுரையீரல் பகுதியில் அமைந்துள்ள பிரத்யேக திரவத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்று பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கவும், மேலும் நுரையீரல் பகுதியில் திசு பரிசோதனை மேற்கொள்வதற்காகவும் பாவிக்கப்படுகிறது.
இத்தகைய பரிசோதனை என்பது சிறிய அளவில் மார்பு குழி பகுதியில் துளையிடப்பட்டு.. அதனூடாக கமெரா பொருத்தப்பட்ட கருவி செலுத்தப்படுகிறது . அதன் பிறகு நுரையீரல் மற்றும் அதன் பிரத்யேக திரவ பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் எம்மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பதும் தீர்மானிக்கப்படுகிறது. இது குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய நுரையீரல் சத்திர சிகிச்சைக்கு உதவியாகவும் இருக்கிறது.
ஆனால் இத்தகைய பரிசோதனைக்கு நோயாளிகள் அதீத ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதும், இத்தகைய பரிசோதனையின் மூலம் உங்களுடைய நுரையீரல் பாதிப்பினை துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சையை பெற்று நிவாரணப் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வைத்தியர் தீபா செல்வி தொகுப்பு அனுஷா.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM