நாடு முழுவதும் பத்திற்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் இருப்பதாக, 2025ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.
அவற்றில் 3,065 பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த பாடசாலைகளில் ஒன்று தேசியப் பாடசாலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 1,645 அரச பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரச பாடசாலைகளில், ஒரு தேசியப் பாடசாலையும், 1,644 மாகாணப் பாடசாலைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
51 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 1,648 அரச பாடசாலைகள் இருப்பதாகவும், அந்தப் பாடசாலைகள் அனைத்தும் மாகாணப் பாடசாலைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2025ஆம் ஆண்டில் தரம் ஒன்றில்; 266,281 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM