மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பிடத்தில் வயோதிபப் பெண்ணிடம் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகள் கொள்ளை

Published By: Digital Desk 3

05 Feb, 2026 | 10:55 AM
image

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரிடம், யுவதி ஒருவர் மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர் பானத்தை குடிக்கச் செய்து, அவரிடம் இருந்த 7 ½ பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மயக்கமடைந்த நிலையில் இருந்த வயோதிபப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பெரிய கல்லாறு பகுதியில் வசிக்கும் குறித்த வயோதிபப் பெண், தனது சகோதரியின் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக புதன்கிழமை (04) பகல் 11.00 மணியளவில் பயணிகள் பஸ்ஸில் ஏறி, பிற்பகல் 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் தரிப்பிடத்தை வந்தடைந்துள்ளார்.

புதூர் நோக்கிச் செல்ல வேண்டிய பஸ் வண்டி ஏற்கனவே சென்றுவிட்ட நிலையில், அடுத்த பஸ் வண்டிக்காக அவர் தரிப்பிடத்தில் காத்திருந்துள்ளார்.

அந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவருடன் வந்த இளம் யுவதி ஒருவர், குறித்த வயோதிபப் பெண்ணிடம் நட்புடன் பேச்சு கொடுத்து, “இங்கு கள்ளர்கள் அதிகம், உங்கள் தங்க சங்கிலியை அறுத்துச் சென்று விடுவார்கள்” என கூறி, தங்க ஆபரணங்களை கழற்றி கைப்பையில் வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குளிர் பானத்தை மயக்க மருந்து கலந்து கொண்டு வந்த அந்த யுவதி, அதனை குடிக்குமாறு பல தடவைகள் வற்புறுத்தியுள்ளார். அதன் பேரில் வயோதிபப் பெண் அந்த குளிர் பானத்தைப் பருகிய பின்னர் மயக்கமடைந்துள்ளார்.

வயோதிபப் பெண் மயக்கமடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரது கைப்பையில் இருந்த 35 இலட்சம் ரூபா பெறுமதியான 05 பவுண் தங்க சங்கிலி மற்றும் 2½ பவுண் எடையுள்ள இரண்டு காப்புகள் உள்ளிட்ட மொத்தம் 7½ பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞருடன் அந்த யுவதி தப்பிச் சென்றுள்ளார்.

மாலை 5.30 மணியளவில் பஸ் வண்டிக்காக தரிப்பிடத்திற்கு வந்த மற்றொரு பெண், மயக்கமடைந்த நிலையில் கிடந்த வயோதிபப் பெண்ணைக் கண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு, உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21