இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் சிறுபான்மை மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் - மேயர் அதாவுல்லா

05 Feb, 2026 | 09:52 AM
image

(ஏ.எல்.நிப்றாஸ்)

நாடு சுதந்திரமடைந்து நாம் இன்று 78 வருடங்களைக் கொண்டாடுகின்ற போதிலும் மக்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறு காரணங்களினால் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர மேயருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

மூவின மக்களும் இணைந்து காலனித்துவ சக்திகளிடம் இருந்து மீட்டெடுத்த நாட்டின் வளங்கள் சரியான முறையில் பகிரப்படவில்லை. மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை உணரச் செய்வது அவசியம்.

இதன் ஒரு அங்கமாக நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைவாக அனைத்து வளங்களும் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அக்கரைப்பற்றில் நேற்று புதன்கிழமை (4) இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றிய மேயர் அதாவுல்லா மேலும் கூறுகையில்

இலங்கையின் வளங்களை கொள்ளையிடுவதற்காக காலனித்துவாதிகள் நாட்டுக்குள் வந்தனர். மூவின சமூகங்களும் ஒன்றுபட்டு போராடி சுதந்திரத்தை பெற்றோம்.

ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகும் இலங்கையின் வளங்கள் மீது வெளிநாட்டுச் சக்திகள் குறியாக உள்ளன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இலங்கை தன்னகத்தே எல்லா வளங்களையும் வைத்துக் கொண்டு வெளிநாடுகளிடம் எல்லாவற்றுக்கும் கையேந்துகின்ற பாணியிலான ஒரு பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்கக் கூடாது. நமது வளங்கள் சரியாக பராமரிக்கப்பட்டுரூபவ் உள்நாட்டுப் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

இப்போது மூன்றாவது உலகப் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சர் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

எனவே யுத்தமொன்று ஏற்பட்டு அதன் விளைவாக இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு, மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகிவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

வளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு அவற்றில் இருந்து உச்சபட்ச பலனைப் பெறுவதற்கு இரு மொழிகளை பேசும் நான்கு இன மக்களும் முன்னிற்க வேண்டும். மிக முக்கியமாக இன விகிதாரசத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் இனிமேலாவது பகிரப்பட வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை மக்கள் சுதந்திரத்தின் பரிணாமங்களை உணர்வார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21