'75 ஆண்டு கால சாபம்' என்ற கருத்தை சுதந்திர தின உரையில் மக்கள் மத்தியில் ஜனாதிபதி நிராகரித்துள்ளார் - கலாநிதி ஹர்ஷ டி சில்வா

04 Feb, 2026 | 02:52 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, '75 ஆண்டு கால சாபம்' என்ற கருத்தை நிராகரித்துள்ளார். அந்த வகையில் கடந்த 75 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்துமே மோசமானவை அல்ல. கடந்த 78 ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்த பலமான, நீதியான மற்றும் நல்ல விடயங்களை நாம் முன்னோக்கி எடுத்துச் சென்று பலப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

புதன்கிழமை (04) கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர் காணொளியொன்றை வெளியிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரையை சுட்டிக்காட்டி ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்தார். குறித்த காணொளியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் காலனித்துவ ஆட்சியிலிருந்து நாட்டை விடுவித்த போதிலும், எமக்கு இன்னும் உண்மையான பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே முதல் உண்மையாகும். பொருளாதார சுதந்திரம் கிடைக்கும் போதுதான் இலங்கை மக்கள் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அப்போதுதான் எமது மக்கள் தமது உழைப்பையும், செல்வத்தையும் தமக்கு விருப்பமான, திருப்திகரமான வழியில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

தற்போதைய சூழ்நிலையில், மக்கள் தமது சொத்துக்களையும் உழைப்பையும் தமக்கேற்றவாறு சுதந்திரமாகப் பயன்படுத்த முடிகிறதா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகும். இதை அனைவரும் அறிவார்கள். நாம் உலகத்துடன் கைகோர்த்து, உலகத்துடன் உறவுப் பாலங்களை அமைத்து, மக்களின் திறமைகள் ஊடாகப் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். அந்த வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் ஒரு பொருளாதார முறையை உருவாக்க வேண்டும். அதுவே உண்மையான சுதந்திரமாகும்.

இன்றைய உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுவாகக் கூறாத ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். கடந்த 78 ஆண்டுகளில் நல்ல விடயங்களும் நடந்தன, தீய விடயங்களும் நடந்தன என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். குறிப்பாக, கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்த '75 ஆண்டு கால சாபம்' என்ற கருத்தை ஜனாதிபதி இன்று மக்கள் மத்தியில் ஆற்றிய உரையில் நிராகரித்துள்ளார்.

இதைத்தான் நாம் நீண்டகாலமாகக் கூறி வருகிறோம். கடந்த 75 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்துமே மோசமானவை அல்ல. நல்ல விடயங்களும் இடம்பெற்றுள்ளன. அதேவேளை மோசமான விடயங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற கடந்த 78 ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்த பலமான, நீதியான மற்றும் நல்ல விடயங்களை நாம் முன்னோக்கி எடுத்துச் சென்று பலப்படுத்த வேண்டும். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர்...

2026-02-14 11:24:17
news-image

தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ;...

2026-02-14 12:32:11
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம்...

2026-02-14 12:07:31
news-image

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு...

2026-02-14 11:59:49
news-image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை...

2026-02-14 11:25:41
news-image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

2026-02-14 11:04:22
news-image

காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய...

2026-02-14 10:44:44
news-image

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச்...

2026-02-14 10:35:17
news-image

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் செல்லுபடியாகும்...

2026-02-14 10:18:55
news-image

நாட்டில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில்...

2026-02-14 09:39:58
news-image

தலங்கம துப்பாக்கிச் சூடு ; உயிரிழந்தவர்...

2026-02-14 09:15:43
news-image

'இந்தியா - AI உச்சி மாநாடு...

2026-02-14 08:59:50