எதிர்பாராத தருணத்தில் ஏற்படும் விபத்தின் காரணமாகவோ அல்லது பல்வேறு திடீர் மருத்துவ காரணங்களாலோ ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்கும் எந்த வயதிலும் ரத்த இழப்பு அல்லது ரத்தப்போக்கு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பின் போது நோயாளிகள் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து நிவாரணம் வழங்குவார்கள். இத்தகைய தருணத்தில் குருதி உறைதல் தொடர்பான பரிசோதனைக்காக த்ராம்போலாஸ்டோகிராபி எனும் நவீன பரிசோதனை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதய தொடர்பான சத்திர சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையின் போது குருதியின் அளவு, குருதியின் தன்மையும் துல்லியமாக அவதானிக்கப்படவேண்டும். இத்தகைய தருணத்தில் ரத்த உறைவு அல்லது ரத்தப்போக்கு ஆகிய பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக த்ராம்போலாஸ்டோகிராபி எனும் நவீன பரிசோதனையை வைத்தியர்கள் மேற்கொள்கிறார்கள்.
இத்தகைய பரிசோதனையின் போது குருதியின் பண்புகளை மதிப்பிடவும், ரத்த உறைவு நோய் பாதிப்பிற்கான அறிகுறிகளை துல்லியமாக அவதானிப்பதற்கும் குருதி செலுத்துவது தொடர்பாக தடையில்லா நிலையை அவதானிப்பதற்கும் இத்தகைய பரிசோதனை அவசியமாகிறது.
ரத்தக் கசிவு என்ற பாதிப்பு உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில் இது தொடர்பான துல்லியமான அவதானிப்பை நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய த்ராம்போலாஸ்டோகிராபி எனும் பரிசோதனை உறுதிப்படுத்துவதால் இத்தகைய பரிசோதனை அவசியம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
வைத்தியர் ஸ்ரீநித் குமார்
தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM