கருத்தரித்திருக்கும் பெண்மணிகளுக்கு சில தருணங்களில் வைத்திய காரணங்களால் சிசேரியன் சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெறும். இதற்கான பல்வேறு காரணங்களில் பிளசன்டா ப்ரிவியா என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் நஞ்சுக்கொடி பாதிப்பும் ஒன்று. இது தொடர்பாக வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
பெண்கள் பேறு காலத்தில் நஞ்சுக்கொடி கருப்பையின் திறப்பை அதாவது வாய்பகுதியை முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ மூடும் போது ஏற்படும் ஒரு சிக்கல்தான் பிளசன்டா ப்ரிவியா எனப்படும் பாதிப்பு ஆகும்.
கருவுற்றிருக்கும் தருணத்தில் கருப்பையில் உருவாகும் ஒரு உறுப்பு தான் பிளசன்டா எனும் நஞ்சுக்கொடி. பெரும்பாலான தருணங்களில் இந்த பிளசன்டா கருப்பையின் மேற்பகுதி அல்லது பக்கவாட்டில் இணையும். இது இயல்பானது.
ஆனால் சிலருக்கு இத்தகைய பிளசன்டா கருப்பையின் கீழ்ப்பகுதியில் இணைந்து விடும். இதனால் பிளசன்டா கருப்பை வாய் பகுதியின் திறப்பை பகுதியளவோ அல்லது முழுமையாகவோ மறைக்கக் கூடும். இது பிரசவ தருணங்களிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ கடுமையான ரத்தப் போக்கை ஏற்படுத்தி அச்சத்தை உண்டாக்கிவிடும்.
பிளசன்டா என்பது தாயின் வயிற்றில் சிசு உருவாகி இருக்கும் போது அந்த சிசுவுக்கு தேவையான ஓக்சிஜன் மற்றும் ஊட்டசத்து வழங்குவதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் ஆதாரமாக செயல்படுகிறது.
இத்தகைய சிக்கல் சில பெண்களுக்கு மட்டுமே இயல்பாக சரியாகும். பெரும்பாலானவர்களுக்கு இது பிரசவ தருணங்களில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தி விடும். இதனால் சிசேரியன் எனப்படும் சத்திர சிகிச்சையிலான பிரசவம் அவசியமாகிவிடும்.
கருத்தரித்து இருபது வாரத்திற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுவது தான் இத்தகைய பாதிப்பின் முதன்மையான அறிகுறியாகும். சிலருக்கு இத்தகைய தருணங்களில் புள்ளிகள் தோன்றக்கூடும். இது பிரசவத்திற்கு முன் கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தி இரத்த போக்கை உண்டாக்கும். அத்துடன் வலியையும் ஏற்படுத்தும்.
இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பை- சிக்கலை துல்லியமாக அவதானித்து, சிசுவின் வளர்ச்சியை பொறுத்து சிசேரியன் மூலமாக பிரசவமோ அல்லது பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணமோ அளிப்பார்கள்.
வைத்தியர் ஸ்ரீ தேவி தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM