பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான சாமியார் குர்மீத் சிங்குக்கு இரு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள் என மொத்தம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ் வழக்கில் கொடிய மிருகத்திற்கு எல்லாம் கருணை கிடையாது என சி.பி.ஐ. நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ‘தேரா சச்சா சவுதா' மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை கேட்டதும் அங்கே நின்றிருந்த குர்மீத் சிங் கண்ணீர் விட்டு கதறினார். தனக்கு மன்னிப்பு வழங்குமாறு கரம் கூப்பி நீதிபதியிடம் அவர் வேண்டிக்கொண்டதுடன் அந்த அறையை விட்டு நகரவும் மறுத்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக குர்மீத் சிங் கூறி உள்ளார்.
இதேவேளை தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜக்தீப் சர்மா “குற்றவாளி (குர்மீத் சிங்), தன்னை கடவுள் என்று பின்பற்றிய பக்தர்களை கூட விடவில்லை. மனிதநேயம் பற்றி கவலை கொள்ளவில்லை. குற்றவாளியிடம் இயற்கையாகவே கருணை என்பது கிடையாது. இது அவருடைய நடவடிக்கையின் மூலமே தெரிகிறது. இதுபோன்ற குற்றவாளி நீதிமன்றத்தில் இருந்து எந்த ஒரு கருணையும் எதிர்பார்க்கக்கூடாது. குற்றவாளி மிகவும் கொடிய மிருகத்தைப்போன்று நடந்துக் கொண்டுள்ளார் எந்த ஒரு கருணையும் கிடையாது என கூறிவிட்டார்.
பாலியல் துஷ்பிரயோகம் என்பது உடல் ரீதியான தாக்குதல் மட்டும் கிடையாது அது பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒட்டுமொத்த நலனையும் அழித்துவிடுகிறது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்ட சி.பி.ஐ. நீதிமன்றம், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தேரா தலைவரை கடவுள் என ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதுபடியே பின்பற்றி உள்ளனர். இருப்பினும், குற்றவாளி (குர்மீத் சிங்) அப்பாவி பக்தர்கள் மீது பாலியல் வன்கொடுமை தாக்குதலை நடத்தியுள்ளார், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டியுள்ளார், இதுபோன்ற குற்றவாளி எந்த ஒரு கருணையையும் எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM