(இராஜதுரை ஹஷான்)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாளை கூடவுள்ள எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம்பிரயோகித்தல் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பாராளுமன்ற அமர்வு நாளை மறுதினம்( செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் அந்த வாரத்துக்குரிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற குழு கூட்டம் நாளை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது மாகாணசபைத் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கும், பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவோம். பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சிகளை விட ஆளும் தரப்பினரே அதிக அக்கறை கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக வெளிப்படுகிறது.
அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை ஆளுங்கட்சிக்கு கிடையாது. புதிய கல்வி மறுசீரமைப்பில் காணப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டினோம்.இறுதியில் நாங்கள் தான் புதிய கல்விக் மறுசீரமைப்பை பிற்போட்டோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.இது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM