20 ஆவது திருத்தத்துக்கு எதிரான அனைத்து மனுக்களும் 6 ஆம் திகதி விசாரணைக்கு ; உயர் நீதிமன்றம்

Published By: Priyatharshan

30 Aug, 2017 | 10:40 AM
image

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் மாகாண சபை தேர்தல் (திருத்த) சட்டமூலம் அல்லது 20 ஆவது  அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத் துக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்க ளும் எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவுள்ளன. இதனை நேற்று உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,  சுதந்திரமான  நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் அல்லது பெப்ரல் அமைப்பு,  அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, மக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளர் திஸ்ஸ காமினி அபேசிங்க ஜயவர்தன யாப்பா,  மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் ஆகிய தரப்பினர் சார்பாக தாக்கல்  செய்யப்பட்ட மனுக்கள் அன்றைய தினம் உயர் நீதிமன்றினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தும் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர்களான அனில் குணரத்ன,  விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

மாகாண சபைத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்காக கொண்டு வரப்பட வுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமுலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்பதால்  விசேட சட்ட வியாக்கியானத்தை வழங்கு மாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதிவாதி யாக சட்டமா அதிபர் பெயரிடப்பட் டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02