மாத்தளையைச் சேர்ந்த செல்வி விவேகானந்தன் ஹரிநாராயணியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.45 மணிக்கு மாத்தளை வீர கெப்பெட்டிபொல அரங்கில் (மாவட்ட செயலக வளாகம்) நடைபெறவுள்ளது.
விவேகானந்தன் மற்றும் ஸ்ரீவித்யா தம்பதியினரின் புதல்வியான ஹரிநாராயணி, 'கலாவிபூஷன்', 'நட்டுவாங்க கலைமணி' திருமதி வேலாயுதன் சுதர்ஷினி (இயக்குநர் மற்றும் நிறுவனர், ஸ்ரீ பரதக்ஷேத்ரா பரதநாட்டிய பள்ளி) அவர்களின் சீடராவார்.
பிரதம விருந்தினராக பி. குமார ரட்ணம் (நீதிபதி, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம்) மற்றும் கௌரவ விருந்தினர்களாக கலாசூரி ஆச்சார்ய கலா சாகர திருமதி வாசுகி ஜெகதீஸ்வரன் (நிறுவனர்-இயக்குநர், நாட்டிய கலா மந்திர்) கேப்டன் கோலித ஜெகத் காஹந்த (இலங்கை டிஸ்டிலரீஸ் நிறுவன முகமைத்துவப் பணிப்பாளர்), அருட்சகோதரி ஜயமணி ரொட்ரிகோ (அதிபர், புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை) ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி உஷாந்தி துரைசிங்கம் (தலைவர், நடன நாடகத் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்), கலாநிதி வி. பி. மன்சியா (நிறுவனர்-இயக்குநர், ஆக்னேயா நடனப் பள்ளி, கேரளா, இந்தியா) ஆகியோரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
மாத்தளை மண்ணின் கலைப்பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமையவுள்ள இந்த அரங்கேற்ற நிகழ்வில் கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM