எம்மில் பலருக்கு திடீரென்று கடுமையான தலைவலி ஏற்படக்கூடும். அதற்கான முதலுதவி அல்லது நிவாரண சிகிச்சையை பெற்றுக் கொள்வது வழக்கம். ஆனால் தலைவலியுடன் கழுத்து வலி அல்லது கழுத்தை இயல்பாக இயக்க முடியாத அளவிற்கு விரைப்பு தன்மை ஏற்பட்டால்... உடனடியாக வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். ஏனெனில் அவை மருத்துவ மொழியில் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என குறிப்பிடப்படும் மூளை தொற்று பாதிப்பாக இருக்கலாம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
மூளைத் தொற்று அல்லது மூளைக்காய்ச்சல் என்பது ஒரே தருணத்தில் ஏற்படும் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையாகும். இத்தகைய பாதிப்பு உங்களுடைய மூளை மற்றும் முதுகுதண்டுவடத்தை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் தொற்று பாதிப்பு அல்லது வீக்கமாகும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை காளான் மற்றும் அமீபிக் ஆகிய கிருமிகளால் இத்தகைய மூளைக்காய்ச்சல் மற்றும் மூளைத் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ளூர் மக்களால் அதிக அளவில் பாவிக்கப்படாத ஏரிகள், ஆறுகள், குளங்கள், வெந்நீர் ஊற்றுகள், ஆழமற்ற நன்னீர் குட்டைகள் ஆகியவற்றில் அமீபா எனும் உயிரினம் வாழ்கிறது. இத்தகைய நீர் நிலைகளில் நீராடும் போது, அமீபா கிருமிகள் எம்முடைய உடலில் புகுந்து மூளையை பாதிக்கிறது.
தலைவலி, கழுத்து வலி, காய்ச்சல், சோர்வு, குமட்டல், வாந்தி, தசை பலவீனம், ஒளி உணர்திறன் பாதிப்பு , நடத்தையில் மாற்றங்கள், மாயத் தோற்றங்கள், ஒலி குறிப்புகள், வலிப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால்... உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனையும் ,சிகிச்சையும் பெற வேண்டும். பதினெட்டு வயதிற்குட்பட்ட சிறார்களாக இருந்தால் நெற்றி வீக்கம், உணவு எடுத்துக் கொள்வதில் பாரிய அசௌகரியம், தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம் ஆகியவை மூளைக்காய்ச்சல் அல்லது மூளை தொற்று பாதிப்பின் அறிகுறியாக பாவித்து, உடனடியாக வைத்தியர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது இருக்கும்.
பொதுவாக ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கும், எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் உடலில் நோய் எதிர்ப்பு திறன் இயல்பான அளவைவிட குறைவாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் என்பதால் அவர்களுக்கு இத்தகைய தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்பதையும் வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு சிறுநீர், குருதி, உமிழ் நீர் ஆகிய பரிசோதனைகளையும், எலக்ட்ரோஎன்சொபாலோகிராம், சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர். சிலருக்கு ஒருங்கிணைந்த சிகிச்சைகளை வழங்கியும் நிவாரணம் தருவர்.
வைத்தியர் வின்சென்ட் தொகுப்பு அனுஷா.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM