மொரட்டுவை - அங்குலானா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடமைப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் 24 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளின்படி, அந்தப் பெண்ணுக்கும் ஆண் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பெண் குறித்த ஆணுடன் திருமணத்துக்கு பின் தவறான உறவு கொண்டவராக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாதுவ – குடவஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தப்பியோடியுள்ள சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் அங்குலானா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM