உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கவேண்டும் எனத் தெரிவித்து மரணதண்டனை வழங்கப்பட்ட கைதிகளின் குடும்பத்தினர் வவுனியா புளியங்குளத்தில் இன்று காலை உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
2006 ஆம் ஆண்டு வவுனியா சுந்தரபுரத்தில் கத்தியால் குத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேன்முறையீடு செய்துள்ளபோதும் தங்களுக்கு சரியான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கும் மரணதண்டனை கைதிகளின் உறவுகள், ஜனாதிபதியை சந்திக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்து அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாக இருப்பதால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என உண்ணாவிரதத்தில் இருந்தவர்களுக்கு புளியங்குளம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததையடுத்து உண்ணாவிரதமிருந்தவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM