கண்டி, துட்டுகெமுனு மாவத்தைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அப்பிரதேசத்தில் யாசகம் பெறும் ஒருவர் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய ஆண் ஒருவர் கண்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாசகம் பெறுபவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதாலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM