கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 'குஷ்' ரக போதைப்பொருடன் இலங்கையர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும், அவர் இரவு நேர விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றுபவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து ஓ.வி-437 (OV-437) ரக ஸலாம் எயார் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரிடமிருந்த இரண்டு பயணப் பைகளுக்குள் 08 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 08 கோடியே 22 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 8 கிலோகிராம் 220 கிராம் எடையுடைய 'குஷ்' போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியையும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM