ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராவல - கேகாலை வீதியில், நேற்று வெள்ளிக்கிழமை (23) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வராவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், மற்றுமொருவரும் காயமடைந்து ருவன்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் கொட்டியாகும்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுரலிய - களுகல வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுகல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் பதுரலிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM