ராகமை பகுதியில் கடந்த 2025.12.23ஆம் திகதி அன்று ரி-56 துப்பாக்கியுடன் காரை கைவிட்டு தப்பிச் சென்ற ஒருவரும், அவருக்கு உதவிய சந்தேக நபரும் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் சில நாட்களுக்கு முன்பு விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (23) காலை குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வத்தளை - ஒலியமுல்ல பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களிடமிருந்து 20 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மீகொடை பகுதியைச் சேர்ந்த, 52 மற்றும் 54 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை (24) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM