(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பு பேரவையின் மூன்று சிவில் உறுப்பினர்களாக ஒஸ்டின் பிரனாந்து, வசந்தா செனவிரத்ன, ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரை நியமிக்க பிரதமரும், எதிர்கட்சித் தலைவரும் பொது இணக்கப்பாட்டுடன் முன்வைத்த பிரேரணைக்கு சபாநாயகர் அனுமதியளித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற அமர்வின் போது சபைக்கு விசேட அறிவிப்பை முன்வைத்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அரசியலமைப்பின் 61 (1) இ, பிரிவின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையின் மூன்று சிவில் பிரஜைகளின் பதவி காலம் 2026.01.19 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன்,சபாநாயகரின் பெயர் முன்மொழிவுடன் ஜனாதிபதியால் அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகள் மூவர் நியமிக்கப்படுவர்.
பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கலுபகே ஒஸ்டின் பிரனாந்து, கலாநிதி வசந்தா செனவிரத்ன மற்றும் உடுநுவர கம்பதிகே ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரின் நியமனம் சபைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது என்றார்.
இதன்போது சபையின் அனுமதியை பிரதமர் கோரியிருந்த நிலையில் சபாநாயகர் அதற்கு அனுமதியளித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM