(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் கல்வித்துறை, நீதித்துறை மற்றும் பொலிஸ்துறை ஆகிய முக்கியமான துறைகளை அரசியலாக்கியுள்ளது.புதிய கல்வி மறுசீரமைப்பை சிறந்த முறையில் கொண்டு வந்தால் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். கல்வித் திட்டம் நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டுக்கு பொருந்தும் வகையில் கல்வி மறுசீரமைப்பை கொண்டுவருவதற்காகவே மக்கள் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினார்கள். ஆனால் அரசாங்கத்தால் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு மக்களாணைக்கு விரோதமானது. பல சர்ச்சைக்குரிய விடயங்கள் புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்து,பல்கலைக்கழக கட்டமைப்பை முழுமையாக அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.கல்வி, பொலிஸ், மற்றும் நீதி ஆகிய துறைகள் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன. இது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.
புதிய கல்வி மறுசீரமைப்பை சிறந்த முறையில் கொண்டு வந்தால் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். கல்வித் திட்டம் நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM