இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு கொண்டுசெலப்படவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ணம், ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பராசூட் மூலம் விமானப்படை வீரர்களால் 22ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கொண்டுவரப்பட்டது.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தக் கிண்ணம் சிறிது நேரம் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டு ஐசிசி அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்ட்டது.

விமானப்படை வீரர் ஒருவர் தனது நெஞ்சுப்பகுதியில் சுமந்தவாறு பராசூட் மூலம் இன்று பிற்பகல் விளையாட்டங்கில் கால்பதித்தார்.

அதனைத் தொடர்ந்து விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் உலகக் கிண்ணத்தை அவர் பார்வைக்கு வைத்தார்.

இலங்கைக்கான உலகக் கிண்ண சுற்றுப் பயணத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஆரம்பித்துவைத்தார்.

இந்தக் கிண்ணம் கண்டி, தம்புள்ளை, யாழ்பாணம் ஆகிய இடங்களுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM