அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது விதிக்கவிருந்த வரி அச்சுறுத்தலைத் திரும்பப் பெற்றுள்ளார்.
டென்மார்க் நாட்டிடமிருந்து கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் ட்ரம்பின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது, பெப்ரவரி மாதம் முதல் 10 சதவீத வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார். தற்போது அந்த தீர்மானத்தை அவர் திரும்பப் பெற்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேட்டோ (NATO) தலைவர் மார்க் ரூட்டேவைச் சந்தித்த பின்னர், கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் பிராந்தியம் தொடர்பாக ஒரு புதிய "ஒப்பந்தக் கட்டமைப்பு" உருவாக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற விரும்புவதாகக் கூறிய ட்ரம்ப், அதற்காகப் படைபலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என உறுதியளித்துள்ளார்.
"நான் நினைத்தால் யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு பலத்தைப் பயன்படுத்த முடியும், ஆனால் அதை நான் செய்யமாட்டேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வளர்ச்சி மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாகவும், அமெரிக்கா பொருளாதார ரீதியாக உயரும்போது மற்ற நாடுகளும் அதைப் பின்பற்றுவதாகவும் ட்ரம்ப் பெருமிதம் கொண்டார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் தமக்கு மிகச்சிறந்த உறவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஷி ஜின்பிங்கை "அதிசயமான மனிதர்" என அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM