(எம்.மனோசித்ரா)
ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி நாடான பிரான்ஸ், இலங்கைக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகளுக்கான ஒரு நிபந்தனையாக மலையக சமூகத்தின் காணி மற்றும் வீட்டுரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் வலியுறுத்தியுள்ளார்.
மலையக சமூகம் சார்ந்த அநீதிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ஒரு சந்திப்பை நடத்துமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி விடுத்த பல கோரிக்கைகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்டை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்த சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டணியின் உயர்மட்டக் குழுவினர், அரசாங்கத்தின் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் வீட்டுத்திட்ட முன்முயற்சியின் கீழ், மலையக இலங்கையர்களை, குறிப்பாகத் தோட்டப்புற குடியிருப்பாளர்கள் சமமான முறையில் நடத்தப்படாமல் புறக்கணிக்கப்படுவது குறித்துத் தமது கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மனோ கணேசன் தனது சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவில், தித்வா புயலால் மலையக மக்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
நாம் தூதுவரிடம் உண்மைகளைத் தெளிவுபடுத்தினோம். தித்வா புயலால் மலையக இலங்கையர்கள், குறிப்பாகத் தோட்டப்புற குடியிருப்பாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், அரசாங்கத்தின் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் வீட்டுத்திட்டத்தின் கீழ் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர்.
உத்தியோகபூர்வ வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட வேண்டிய 5 மில்லியன் ரூபா நிதியுதவி மற்றும் காணி ஒதுக்கீடு ஆகியவை மலையகச் சமூகத்திற்கு இன்னும் மறுக்கப்பட்டு வருகின்றன. இது வெறும் கவனக்குறைவு அல்ல. இது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடாகும்.
இவ்வாறான சமூகம் சார்ந்த அநீதிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ஒரு சந்திப்பை நடத்துமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி விடுத்த பல கோரிக்கைகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரவும், மலையக மக்களுக்கு சமமான உரிமைகள், வளங்கள் மற்றும் கௌரவத்தை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரான்ஸிடம் நாம் வலியுறுத்தினோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி நாடான பிரான்ஸ், மலையக சமூகத்தின் காணி மற்றும் வீட்டுரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கைக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகளுக்கான ஒரு நிபந்தனையாக முன்னிறுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM