வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர்ப் பற்றாக்குறை, வறுமை மற்றும் குறை விவசாய உற்பத்தித்திறன் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக கிவுல்ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, கருத்திட்டப் பிரதேசத்தில் நிலவுகின்ற குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வாக உத்தேச கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிவுல்ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கும், உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி 2026 தொடக்கம் 2031 இறுதி வரையான காலப்பகுதியில் கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கும், கருத்திட்டத்தின் மொத்தச் செலவு மதிப்பீட்டை 23,456 மில்லியன் ரூபாய்களாக திருத்தம் செய்வதற்கும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கிவுல்ஓயா நீர் வளத்தை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தி வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் நீர்ப் பற்றாக்குறை, வறுமை, குறை விவசாய உற்பத்தித்திறன் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிவுல்ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2011.09.28 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அப்போதைய மதிப்பீட்டுச் செலவாக 4,170 மில்லியன் ரூபாய் கருத்திட்டமானது, மகாவலி நீர்த்தேக்க அபிவிருத்திக் கட்டமைப்பின் ‘டு’ வலயத்தில் 4 ஆண்டுகளில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்டிருப்பினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அக்கருத்திட்டத்தை 2023.12.31 அன்று தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இத்திட்டத்தை மீள நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM