தென் ஆப்பிரிக்காவின் கௌடெங் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பாடசாலைக்குச் சொந்தமான வேன் ஒன்று திங்கட்கிழமை (ஜன.19) காலை, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு பாடசாலைக்கு சென்றது.
வெண்டர்பிஜில் பார்க் நெடுஞ்சாலையில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல ஓட்டுநர் முயன்றுள்ளார்.
அப்போது, எதிரே வேகமாக வந்த லொறி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பாடசாலை வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில், வேனில் பயணித்த மாணவ-மாணவியர் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக பலியாகினர். பலர், பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த மாணவ-மாணவியரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு, 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 7 மாணவர்கள் மற்றும் வேன் சாரதி தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் உள்ளது.
இந்நிலையில், பலியானோரின் குடும்பத்தினருக்கு அந்நாட்டின் அதிபர் சிறில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM