(எம்.மனோசித்ரா)
அரசியலமைப்புச் சபைக்கு மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவொன்றில், சிங்கள வார இதலொன்று வெளியிட்டுள்ள செய்தி பொய்யானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது ஊடகத் தரங்களைக் குறைத்து மதிப்பிடும் வகையில் புனையப்பட்ட ஒரு கதை என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்பட வேண்டிய மூன்று சிவில் சமூக உறுப்பினர்களின் பெயர்கள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரால் இணக்கப்பாட்டுக்கு வர முடியவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஏழு பெயர்களைச் சமர்ப்பித்திருந்த அதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் 10 பெயர்களை முன்மொழிந்ததாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
வெளியேறும் மூன்று சிவில் சமூக உறுப்பினர்களான கலாநிதி அனுலா விஜேசுந்தர, கலாநிதி பிரதாப் ராமானுஜம் மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோரின் பதவிக்காலம் கடந்த வாரம் முடிவடைந்ததையடுத்து, இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசியலமைப்பிற்கமைய, அரசியலமைப்புச் சபைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணக்கம் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். இந்நிலையிலேயே இது குறித்து வெளியான செய்தியை எதிர்க்கட்சி தலைவர் நிராகரித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM